மழை சத்தம் கூட
அவளின் சுவாசம்
போல கேட்கிறது

பார்வை ஒருமுறை
சந்தித்தபோது
உலகமே திசை மாறியது

கண்ணிலே தங்கிய
அந்த இரவு
இதயத்தில் இன்னும் மினுக்குகிறது

மழைத் துளியில்
விழும் துளிர் போல
என் இதயம் நெகிழும்
உன் நினைவில்

புறக்கணிக்கிறேன்
நீ வராத
பொழுதுகளை

தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்குறது உள்ளம்

காதல் உண்மையானதாக
இருக்கும்போது தூரம்
ஒன்றுமில்லை

பார்வை சேரும் தருணம்
இதயத்துக்குள் புது உலகம் மலர்க்கிறது

ஒரு மெல்லிய நெருக்கம்
சத்தமில்லா பூகம்பம் போல
மனதில் பரவி விடும்

தீண்டலில்
காற்றையும்
மிஞ்சி விடுகிறாய்
நீ இதமான
நினைவாகி தென்றலாய்