உறங்கும் அவளின்
விழிகளுக்குள்
உறங்காது உயிர்த்திருக்கும்
எனது நினைவுகள்

தொலைவில் இருந்தாலும்
நெருக்கம் தோளின் சூட்டில்
உணரப்படுகிறது

உன் காத்திருப்புக்கள்
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்...

அருகாமையில் உள்ள காதல்
எல்லாம் சேர்வதுமில்லை
தொலைவில் உள்ள காதல்
எல்லாம் பிரிவதுமில்லை

உன் நினைவுகள்
என் மனதில்
ஒரு பூங்காற்று போல
அவை எப்போதும்
எனக்கு மகிழ்ச்சி தரும்

நீ என்னுடன்
இல்லாத நேரம் கூட
உன் நினைவுகள்
என்னை விட்டு போக மறுக்கின்றன

நெருக்கமான ஒளி கூட
விலகும் நேரத்தில்
காதலின் நிழல் மட்டும்
பின் தொடரும்

மனதுக்குள்
மலர்ந்தாய்
மலராய்....
மனமெங்கும்
மணக்கின்றது
உன் வாசனை....

இதயம் தப்பித்துச் செல்லும்
திசையே சில நேரங்களில்
காதலின் வழி

மூடிய கண்கள்
பேசும் ரகசியங்கள்
காமத்தின் கவிதைகள்