யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது
யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது
நெற்றியில் பொட்டிட்டு
கொள்ளும் போதெல்லாம்
உன் இதழிட்ட
திலகம்
பௌர்ணமியாய்
ஒளிர்கிறது மனதில்
உன் நினைவு
தொற்றி கொண்டால்
என்னுள்ளும்
பல கிறுக்கல்கள்
கவிதைகளாக
மௌனத்தில்
மழையாகக் கரைகிறாள்
என் நெஞ்சின் பூமியில்
என்னை மறந்து கொஞ்ச
நேரம் உலகை ரசிக்க
நினைத்தால் அங்கும்
வந்துவிடுகிறாய் நானே
உன் உலகமென்று
என் உயிரின் துடிப்பில்
ஒளிர்வது
உன் நினைவின் தீபம்
என் நாழிகைகள்
எப்போதும் அழகுதான்
நம் அழகிய
நினைவுகளோடு
நகரும் போது
நிழலாக கூட இருக்க
அவளுக்கு அருகில் இருக்கணும்
அது தான் என் காதலின் எல்லை
காதலின் மென்மையான சாயல்
சோர்வான நாட்களை
வசந்தமாக மாற்றுகிறது
கைதான் தொடவில்லை
என்றால் என்ன
ஆன்மா தழுவியிருப்பதை
யாரால் மறுக்க முடியும்?