தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்

உன்னிடம் பேசும்
ஒரு நொடி கூட
ஒரு முழு வாழ்க்கையை
போல் உணர்கிறேன்

பரிதாபமாய் தோன்றும்
புன்னகை கூட
காதலனின் பார்வையில் பூக்கும்

மூச்சின் இடைவெளியில் கூட
காதல் அலை போல வந்து
மனதை மென்மையாக ஆட்கொள்கிறது

எச்சரிக்கையற்ற பார்வை
ஆசையின் முதல் பாதை

பல காலங்கள்
கடந்தும் கூட
இன்று வரை
காலாவதி ஆகாமல்
இருந்து கொண்டு இருப்பது
காதல் என்ற ஒன்று மட்டுமே

தொடுதல் என்பது
தோலுக்குள் மட்டும் இல்லை
ஆன்மாவையும் எரிக்கும் தீ

அலை அலையாய்
சுழல்கிறது நினைவலைகள்
உதிர்ந்து விட்ட இலையின்
ஒரு துளி கண்ணீர் துளியில்

என் காதில் நீ
உரைக்கும் காதல்
இரகசியம் என்னை
உறைந்து நிற்க
வைக்கும் மந்திரமடி

கோடை காலத்தில்
திடீர் மழை போல்
நீயும் வர
நனைகின்றேன்
நானும் சந்தோஷ
சாரல்களில்