பாசத்தைப் பொழிய
பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
என்னவோ உன்
மடியைத்தானடா

விழி முன்னே
நீ வந்தால்
கண் இமைக்காமல்
ரசிக்கிறது மனம்

தயவு செய்து மொழிகளால் பேசு
விழிகளால் பேசாதே
எத்தனை முறை வீழ்வது
உன்னுள் நான்

நெருக்கம் இல்லாத
இடைவெளியில் கூட
இரு இதயங்கள்
ஒருவரை ஒருவர்
நினைத்து ஏங்கும்
இசையாக உருகுகின்றன

இருவர் காதலின்
ஆழம்பற்றி இணையும்
விரல்கள் நிறைய பேசட்டும்

ஒரு நிமிட காதல்
ஆயிரம் வருட
நினைவுகளை தருகிறது

நீ ருசித்த
மிச்சமென்றால்
எப்போதும் சுவை
அதிகம் தான்
(தேனீர்)

சுவாசம் கூட காதல் சொல்லும்
மெழுகுவர்த்தி போல ஒளிர்கிறது

பேச்சு வார்த்தை
இல்லாத போதும் கூட
சிலர் மீதான
அன்பு குறைவதே இல்லை

காதலே இல்லாத
கவிதையை காதலிக்கிறேன்
நீ காதலோடு எழுதியதால்