பார்வை மோதிய அந்த நொடி
மனம் தன் பாதையை மறந்தது

கண்ணீர் வந்து போகலாம்
ஆனால் காதல் நிறம் மங்காது

மௌனமாக பழகும் கண்கள்
மொழியில் சொல்லாத காதலை
எடுத்துக் காட்டும்

கண்களை மூடினாலே
கனவாக வந்து
தங்கி கொ(ல்)ள்கிறாய்
விழிகளுக்குள் விலகாமல்

பார்வையில் தோன்றிய நிழல்
வாழ்நாள் வரை தொடர்கிறது

பாசம் ஒரு பார்வை போதுமே
ஆயுள் முழுதும் நிலைத்திருக்க

மழை சொட்டும் சத்தத்திலும்
இதயம் அவளின் பெயரை கேட்கிறது

வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்...

தூரத்தில் இருந்தாலும்,
நினைவுகள் இதயத்தை சுற்றி
மெல்லிய காதலாக
மலர்ந்து நிற்கின்றன

பாசம் சில நேரம்
மௌனமாகவே பேசும்
ஆனால் அதுவே மிக ஆழம்