நீயறியாமல்
உனை சு(வா)சிப்பதும்
ஒரு சுகம் தான்
காதல் கணவா

உன் கண்களின் ஆழத்தில்
இழந்தேன் என்னை
அதை மீண்டும்
காண நினைத்தேன்
ஆனால் நீயே
என் உலகம்
என்பதை உணர்ந்தேன்

காதல் என்பது
எட்ட முடியாத விரல்
அது உன் அருகில்
என்னை தொட்டது

வெறும் தோற்றத்தில்
இல்லை ஈர்ப்பு
அதற்கு உணர்வுகள்
ஓர் அடிப்படை

படிக்கும் எதுவும்
பதிய வில்லை
மனதில் கண்கள்
உனையே வாசிப்பதால்

தொடாமல் தழுவி விடும்
உணர்ச்சி தான் உண்மையான காதல்

தூங்க முடியாத இரவுகள்
காதலின் இசையாக
மாறுகின்றன

வார்த்தைகள் இல்லாத
நேரங்களில் கூட
இரு கண்கள் காதலிக்கத் தெரிந்தன

கண்கள் பேசும்
மொழியைக் கேட்க
என் இதயம்
ஆர்வமாக துடிக்கிறது

இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்
ஒருவரை மட்டும் தேடுகிறது