தொட்டுப் பார்த்த
ஆசை அல்ல
தொட்டுவிடாமல்
விட முடியாத காதல்
இரண்டு விரல்கள்
சேரும் போது
தோன்றும் அதிர்ச்சி
காதலின் வினையெதிர் சக்தி
இதயங்கள்
தனித்தனி என்றாலும்
உன் சுவாசம்
தீண்டவில்லையெனின்
என் மூச்சும் இல்லை
(சு)வாசிப்பது
நீயென்றால்
கவிதையாய்
நானிருப்பேன்
காதல் என்பது
இரண்டு இதயங்கள்
ஒன்றாக துடிப்பதல்ல
ஒரு இதயம்
அடுத்த இதயத்திற்காக துடிப்பதே
உண்மையான காதல்
சற்றே
நீ விலகினாலும்
இருளாகுது
என்னுலகம்
இதயத்தின் ஓசையில்
கலந்து வரும் பாசம்
காலத்தைக் கூட
அழகாக மாற்றுகிறது
கண்கள் கூட சொல்லாத
உணர்வுகளை
இதயம் மட்டும்
மெதுவாக எழுதித் தரும்
உன் வெற்றிடத்தை
நிரப்பி கொள்கிறேன்
நம் நினைவை
கொண்டு
நீயில்லா பொழுதுகளில்
உன்னுடன் பேசாத
ஒரு நாள் கூட
உயிர் இல்லாத
ஒரு நாள் போல் தோன்றும்
💖 பக்கம் 193 / 478
📋 Copied