நினைவுகள் மட்டும்
மிஞ்சும் காதல்
காலம் கடந்தாலும் அழியாது

இரண்டு கண்கள்
சந்திக்கையில் தொடங்குவது
பார்வை அதே பார்வை
நீண்டால் பிறப்பது காதல்

நீ காதலோடு தந்த தேநீரின்
ருசியை உன்னோடு அமர்ந்து
அருந்தும்போது தான்
உணர முடியும்

காதல் வார்த்தைகளில் இல்லை
அது பார்வையின்
மௌனத்தில் மட்டுமே உணரலாம்

இதயம் தேடும் அமைதி
பாசத்தின் தொடுதலில்
புதிய உயிராக மலர்கிறது

உதடுகள் அருகில்
வந்த தருணம்
உலகமே மறைந்துவிடும்

உன் அன்பின்
ஆழத்தை உணரத்தான்
இத்தனை தொலைவோ
நமக்கிடையில் அன்பே

மௌனம் பேசும் இரவுகள்
ஆசையின் மொழியாகும்

கண்கள் காணாத
போதும்
சுகமாய் தீண்டும்
காற்றாய் மனதை
தீண்டி செல்கிறாய்
காதலால் இதமாய்

நீ தொட்டு சென்ற
வெட்கத்திலும் விட்டு
சென்ற மிச்சத்திலும்
சிக்கித் தவிக்கிறது
என் நாணம்