குடிசையில் வாழ்ந்தாலும்
உன் மன மாளிகையில்
அரசி நானே

பார்வை பேசும்போது
வார்த்தைகள் தேவையில்லை
ஆசை அழுத்தமாக உணரப்படுகிறது

சுவாசம் ஒன்று கலந்து
உனது தேகம்
எனது வரம்புகளை
மறக்க வைத்தது ❤️‍🔥

இரவும் தூங்கவில்லை
காரணம் நினைவுகளின்
பரிசல் ஓட்டம்

சற்றே
இமை மூடிக்கொள்ளேன்
யோசித்து வைத்ததை
வாசிக்க வழியின்று
யாசிக்கிறது மனம்

எத்தனை மைல் தூரம்
நீ இருந்தாலும்
எந்தன் மனதை
சிறைப் பிடித்தவன் நீயே

தொடாத தொடுதலே
நரம்புகளைத் தூண்டி
இரத்தத்தை வேகமாக ஓடச் செய்து
கனவுகளைக் கொழுப்பாக மாற்றும்

பார்வையில் மிதக்கும் சுகம்
சொற்களால் விவரிக்க முடியாதது

தொட்டதுமே இதய துடிப்பு
திசையை மாறுகிறாள்
அவளின் நேசம்
உணர்வின் மேலான இசை

ஒரு பெயர் சொல்லும் போது
இதயம் துடிக்கிறது என்றால்
அது காதல்