உன் சிறு சிறு
சந்தோஷங்களில்
என் பெரும்
மகிழ்ச்சியும்
கனவில் வந்தது
நீயென்றால்
கலைந்த கனவை
மீண்டும் தொடர்வேன்
கண் மூடாமலேயே
தொட்ட இடங்களில்
வாசகங்கள் இல்லை
கவிதைகள் எழுந்தன
கரம்பிடித்து
இதழ் அணைத்து கதைக்க
கனா இருந்தாலும்
விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
கண்மணியே
வாழ்க்கை அழகாக இருக்க
ஒரு இதயம் மட்டுமே போதுமானது
அது காதலிக்க தெரிந்தால்
வெறுக்கப்பட்ட
தனிமையையும்
ரசிக்க
வைக்கிறாய்
என்னுள்ளிருந்து
மழைத்துளி மண்ணை
நனைத்தாற்போல்
காதல் உயிரை நனைத்து
அமைதியை வழங்குகிறது
உன் கண்களில்
காதல் இருக்கிறது
ஆனால் உன் பார்வையில்
ஆசை மறைந்து கிடக்கிறது
கரையும் கண்ணீரில்
நிரம்பி வழிவதும்
நம் காதலே
உனக்காக
அழும் போதும்
நேரம் நின்று போனதுபோல்
உணர்வு கொள்ளும் அந்த நொடி
ரொமான்ஸ் அதுவே
💖 பக்கம் 173 / 478
📋 Copied