பார்வையில் மறைந்திருக்கும் ஆசை
இதய துடிப்பை வேகமாக்குகிறது

வாழ்ந்து காட்ட
எத்தனையோ வழியை
தேடி தேடி
இறுதியில்
உன் நிழலில் வாழ்வதே
அழகு என உணர்ந்தேன்

காதல் என்றால்
ஓர் இழைபோல இணைவில்லை
அது உயிரோடு நகரும் உணர்ச்சி

விலகல்
நான் வெறுக்கும்
வார்த்தை
உன் நே(சுவா)சத்தில்
நெறுக்கத்தில்

வெளிச்சமாக பேசாமல்
இருளிலும் மனதை உருக்கும்
காதல் ஒரு கரிசனம்

இதயம் துளிக்கத் துளிக்க
நினைவுகள் மெதுவாக காதலிக்கின்றன

நெருக்கம் என்பது
உடலின் அருகாமை அல்ல
ஆன்மாவின் ஒற்றுமை

மழை துளிகளில்
ஈரமாவது உடல்
ஆனால் நினைவுகளில்
ஈரமாவது இதயம்

மௌனம் கூட
காதல் பாடல்கள் பாடும்
நேரம் உண்டு

சும்மா பார்க்கும்
கண்கள் கூட
உள்ளுக்குள் சிதற வைக்கும்
வலிமை கொண்டவை