தேடும் மனதை
ஏமாற்றியதில்லை
கண்ணெதிரே
வந்து விடுகின்றாய்

பட்டும் தெரியவில்லை
விட்டு சென்ற ஒன்றை
விடாமல் நினைக்குது இதயம்

தொடாத தொடுதலே
நரம்புகளை கிளரச் செய்து
ஆசையின் அலைகளை
எல்லைகளைக் கடக்கச் செய்கிறது

என் இதயத்தின்
காதல் வலைகளில்
நீ தான் என் அடையாளம்

ஏமாற்றம்
என்று தெரிந்தும்
மனம்
எதிர் பார்ப்போடு
காத்திருக்கு
உனை
நீ வருவாயென்றே

சாரல் மழையோடு
தூறலாய்
நம் காதல்
சேர்ந்தே நனைக்கிறது
என்னை
ஆசை மழையில்

உன்னைக் காதலிக்க
ஆரம்பித்த நாளிலிருந்து
என் உலகமே புதிதாக மாறிவிட்டது

உன்னில் தொலைந்ததால்
நானும் நலமாக
நாமாய் என்னுள்

நான் உன்னை மட்டும்
காதலிக்கவில்லை
உன் அருகில் இருந்த
ஒவ்வொரு நிமிடத்தையும்
காதலிக்கிறேன்

சுவாசத்தில்
நீர் கலந்து போனால்
காதல் இங்கு தீப்பற்றும்