என்னுடைய உண்மையான
அன்பை நீ உணராத வரை
இந்த பிரிவு உனக்கு
மகிழ்ச்சியாக இருக்கும்

மறக்க நினைக்காத
நினைக்க சலிக்காத
உறவென்றால் அது
நீ மட்டுமே

மென் தீண்டலில்
பதித்தான் அழுத்தமாய்
காதலை முத்திரையாய்
முத்தத்தில்

காதல் என்பது
காற்று போல
அதை காண முடியாது
ஆனால் நம் உள்ளத்தில்
உணர முடியும்

உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே

உதடுகள் பேசாமல்
ஆசைகள் மட்டுமே உரையாடும்
அந்த நொடி சுகம்

புதைந்து போகிறது
என் கோபங்களும்
உன் காதலின் ஆழத்தில்

மௌனமான இரவில் கூட
அவளின் சுவாசம்
நெருப்பாக மாறுகிறது

நீ இல்லாத
தருணங்கள் கூட
தனிமை என்பதை
யான் அறியேன்
அப்போது
உன் நினைவுகளில்
நான் மூழ்கியிருப்பேன்

நெஞ்சுக்கு நடுவே
சும்மா அமர்ந்துவிட்ட
ஒரு நிமிடம்
நூறு கவிதைகள் பேசும்