நெஞ்சில் நெருப்பாய் எரியாது
அவளோட ஒரு பார்வை போதும்
என் உடல் துளைக்கும்
சொற்கள் பேசவில்லை
ஆனால் மௌனம்
கதை சொன்னது
எனக்கான சிறிய உலகத்தில்
நான் தேடிக்கொண்ட
மிகப் பெரிய உறவு நீ
நீண்டு பயணம் செய்ய
உயிரை தாண்டி
நினைவில்
நிற்கும் நினைவுகள்
காதலின் அடையாளம்
நான் கேட்டு ரசித்த
கவிதைகளும்
அவள் சொல்ல விரும்பிய
வார்த்தைகளும்
அவளின் இரு விழிகளுக்குள்
புதையல்களாய்
கொட்டி கிடக்கின்றன
தோளில் ஓயும்
ஒரு சுவாசம்
வாழ்வை மறக்க வைக்கும்
நமக்கு பிடிச்சவங்க மனசுல
வேற ஒருத்தர் இருக்காங்கனு
தெரியாத வர எல்லாமே
நல்லா தான் இருக்கு
உன் இதழ்களின்
மௌனத்தில் கூட
என் ஆசைகள்
திசை மாறுகின்றன
நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
கனவுகளோடு காத்திருக்கும்
கண்களுக்கு காட்சி
தருவாயோ
இல்லை கண்மையை
கரைப்பாயோ
💖 பக்கம் 166 / 478
📋 Copied