முகம் பார்த்து பேச
ஆசையாக இருந்தாலும்
வரும் குறுஞ்செய்திகளை
பார்த்து மனம்
ஆறுதல் அடைகிறது

நேசித்தலை விட பிரிதலின்
போது உன் நினைவுகள்
இரட்டை சுமை மனதின்
அழுத்தம் குறைக்க ஒரு
முறை கடன் கொடு
உன் இதயத்தை

பிரம்மை என்றாலும்
பிரமித்து போகிறேன்
காணும் இடங்களில்
எல்லாம் உனை
காணும் போது

நீயில்லா ஒரு உலகத்தை
நினைத்தாலே அந்த உலகம்
வெறும் காகிதக் கவிதை
போல தோன்றுகிறது

தோளில் விழும்
அவள் முடி கூட
என் தேவதை என
நம்ப வைக்கும்
வித்தை வைத்திருந்தது

கண்கள் பேசும்
காதல் மொழி
வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டது

மறைக்க முடியாத ஆசை
இரவின் இருளில் கனவுகளுக்குள்
வெப்பமாக நுழைந்து
உயிரை கிளரச் செய்கிறது

நீ என்னை விட்டு
விலக நினைக்கும்
அந்த நொடிக்கு முன்
நீ நினைத்து பார்க்க முடியாத
தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்

நாற்றோடு
கதை பேசும்
காற்றாய் மனதை
உரசுகிறாய்
நீ காதல்
மொழி பேசி

ரசிப்பதனைத்தின்
ரசனையாய்
நீயே கலந்துள்ளாய்
என்னுயிரே