சாயும் நேரத்தில் கூட
ஒரு தடவை தொட
விரும்பும் விரல்கள்
உணர்வுகளை விட
ஆழம் சொல்கின்றன
என்னை மறந்து கொஞ்ச
நேரம் உலகை ரசிக்க
நினைத்தால் அங்கும்
வந்துவிடுகிறாய் நானே
உன் உலகமென்று
எதேட்சையாக ஏனும்
கண்ணில் பட்டுவிடாதே
உனை எதிரெதிரே
சந்திக்கும் வலிமை
எனக்கில்லை
இரண்டு இதயங்கள்
பேசாமல் புரிந்துகொள்வதே
உண்மையான காதல்
என் காதலும்
அழகு தான்
உன் இதயமெனும்
கருவறைக்குள்
சுவாசிப்பதால்
என் இதயம்
உன்னுடன் எழுதப்பட்ட
ஒரு காதல் கவிதை
வானவில்லிலும் காணாத
வண்ணம்
என்னவனின்
அழகிய எண்ணம்
துடிப்பும்
தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்
உன் காத்திருப்புக்கள்
எனக்காக மட்டுமே
என்பதில் நானும் சுயநலகாரிதான்...
மனைவிக்கு
எப்போதும் இருக்கும்
கோபம் தன் கணவனை
பற்றியதாக மட்டும்
தான் இருக்கும்
💖 பக்கம் 167 / 478
📋 Copied