மூச்சுகள் ஒன்றோடொன்று
கலக்கும் நேரம்தான்
இருவரும் உண்மையில்
ஒன்றாகும் தருணம்

காற்றில் கலந்த
அவளின் வாசனை
இதயத்தில் ஒரு மெளனம்

தூரம் இருக்கையில் கூட
அவளது நினைவுகள்
தோளில் சாய்ந்து
நித்திரை கொள்ளும்

உன் பார்வையின்
மெழுகுவர்த்தியில்
என் இதயம் மெலிந்து
காதலாக ஒளிர்கிறது

காற்றோடு கலந்து
காதலாகி கவியெழுத
தூண்டுகிறாய் எனையும்
தென்றலாக
நீ மோதி

உன்னை முழுவதுமாக
புரிந்துகொள்ளும் ஒருவரை
பெற்றுவிட்டால்
அது வாழ்க்கையின்
மிகப்பெரிய வரம்

சிரிப்பில் தங்கிய பாசம்
மனதின் ஆழத்தில் வீடு கட்டுகிறது

நேசிப்பவன்
இதயத்தில் வாழ்ந்தாலும்
உண்மையான காதல்
நினைவுகளில் நிறைந்திருக்கும்

வண்ணம்
மாறா மயிலிறகாய்
எண்ணமெல்லாம்
நிறைந்து விட்டாய்
வருடியே
மனதை நினைவால்

இருவர் காதலின் ஆழம்பற்றி இணையும்
விரல்கள் நிறைய பேசட்டும்