சுதந்திரமான மனதும் சுயநலமாகி
போனது உன் அன்பு எனக்கே
எனக்கு மட்டும் சொந்தமென்று
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்

காதல் என்பது
நினைவுகளின் விதை
கனவுகளின் அறுவடை

இரவின் மௌனம் கூட
இனிமை பெறும்
இரு இதயங்கள் பேசும் போது

ஒவ்வொரு துடிப்பும்
அவளுக்காகத்தான் என்று
உணர்ந்தவன்தான் காதலன்

அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை

பார்வை தொட்ட நொடி
இதயம் உருகி விட்டது

மௌனத்தில் கூச்சலிடும்
அந்த ஆசை
கண்களில் படிந்த
வியர்வையால் தெரியும்

பல பக்கங்களை
புரட்டிய போதும்
ஒரு பக்கத்திலும்
அறிய முடியவில்லை
உன் மௌனத்துக்கான
காரணத்தை
மன புத்தகத்தில்

உள்ளத்து உணர்வெல்லாம்
உனைக் கண்டதும்
ஊமையாகி
வெளிப்படுத்த முடியாமல்
வெட்க்கச்சாயம்
பூசிக் கொள்கிறது
என் முகம்

மறந்துட்டாங்களா
நினைச்சுட்டு
இருக்காங்களானு கூட
தெரியாம இன்னும்
மனசு மட்டும்
அவங்களையே
சுமந்துட்டு இருக்கு