உந்தன் நெற்றி மீது
ஒற்றை முத்தமிட்டு
எனக்கானவன் நீதான் என
முத்திரை பதித்திட ஆசையடா
காற்று வந்து சென்றாலும்
சில வாசனைகள் மறையாது
பருகப் பருக
தீராத காதல்
நீ என் கண்களில்
காதலா
காலை ஒளிக்குள் உருகும்
காதல் அல்ல இது
இரவின் இருளிலும்
காயும் உணர்வு
கண்கள் பேசத் தொடங்கினால்
வார்த்தைகள் தேவையற்றவை
கண்கள் பேசும் தருணத்தில்
மொழிகள் தாமாகவே
மௌனமடைகின்றன
யுத்த களத்தில்
எல்லை மீறாதவன்
தடுத்தும் மீறுகிறான்
எல்லை முத்த களத்தில்
நெற்றி முத்தம்
உன் முதல் ஸ்பரிசம்
ஊடுருவுகிறது
மனமெங்கும்
நித்தம் விரல்
தொட்டிட பொட்டிட
காற்றாய் வந்த
உன் சுவாசம் கூட
என் உடலை தீண்டும் போது
அதுவே எனக்கொரு கவிதை
அத்தனை தைரியமும்
அமைதியாகிறது
உன் கண்களை
எதிர் கொள்ள
முடியாமல்
💖 பக்கம் 164 / 478
📋 Copied