கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்
நீ சென்ற
பின்னும்
ஓடி திரிகிறது
அங்குமிங்கும்
குறும்பு
குழந்தையாய்
மன அறைக்குள்
உன் நினைவுகள்
சுகமான இம்சயாய்
எண்ணற்ற
ஆசையிருந்தாலும்
உனை கண்டதும்
மனம்
நீ மட்டும்
போதுமென்கிறது
பார்வையின் மென்மை
வார்த்தையற்ற கவிதையை
இதயத்தில் எழுதுகிறது
அன்பின் மொழி
உரைக்கும் போது
நான் உன்னுடைய
காதலின் சங்கீதம்
ஆகி விடுகிறேன்
மையில்லா
உன் கிறுக்கலில்
பொய்யாய்
ஒரு கவிதையை
ரசித்தே கிறங்குது
மனமும்
நிலா பார்க்கும் போது கூட
அவளின் முகம் நினைவாகிறது
நீ எனக்கு ஒரு கனவின் சித்திரம்
அதை உண்மையாக மாற்ற
நான் உன்னுடன் இருக்க வேண்டும்
கொலுசொலியும்
இம்சைதான்
உன் நினைவிசையை
தூண்டிவிடும் போது
தொட்ட பார்வையின் நிசப்தம்
ஆசைகளை விழுங்க வைத்தது
💖 பக்கம் 162 / 478
📋 Copied