சிந்தாதே சிரிப்பை
சிதறுகிறது
என் சிந்தனையும்

மழையில் நனைந்த நொடியில்
காதல் தன் வாசனையை
விட்டுச் செல்கிறது

என் உயிரை விட
மேலானது
உன் ஓர் அணைப்பு

தொட்டதிலிருந்தே
உயிர் நடுக்கிறது
அது காதலா
ஏக்கமா எனத் தெரியவில்லை

கோடையில் வெப்பமாய்
பருகியும் தீரவில்லை
உன் நினைவின்
தாகம்

தொல்லையென
நினைத்தேன் உன்னை
தொலைந்துபோனேன்
நானே உன்னில்

அழகான இடத்திற்கு அழைத்து
சென்று என் காதலை
சொல்ல ஆசைதான் ஆனால்
நீ என்னுடன் இருக்குமிடம்
எல்லாமே அழகாய் தெரிகிறதே
என்னதான் நான் செய்ய ?

நினைவுகளால்
கிள்ளி அழ வைத்து
கனவுகளால் தாலாட்டி
மகிழ வைக்க
உன் காதலால்
மட்டுமே முடியும்

நினைவுகளைக் கடந்த ஆசை
கனவுகளின் திரையை
எரியும் நெருப்பாக மாற்றுகிறது

இன்னும்
சற்று நேரம்
துயில்கொள்
ரசித்து கொள்கிறேன்
உன்னை
எனை கொல்லுமுன்
உன் விழிகள்