பார்வை தொட்டதிலே
மனசு பூத்தது
ஒரு வார்த்தை இல்லாமலே
காதல் முழுமை ஆனது

வரும் அழைப்புக்களை
எல்லாம் நிராகரிக்கின்றேன்
உன்னழைப்புக்கு
தடையிருக்க கூடாதென்றே

உன்னில் தொலைய
தயங்குவதேயில்லை
உள்ளம் என்னிலையிலும்

தோளில் சாயும் நிமிடம்
வாழ்க்கையின்
பாதுகாப்பு போல இருக்கிறது

கண்ணோட்டத்தில்
காதல் இல்லை
அந்த ஒரு பார்வையில்
உயிரோட்டம் இருந்தது

வந்தவுடன் மறைந்துவிடும்
வானவில்லாய் அல்ல
நமதன்பு வளர்பிறைக்குள்
ஒளிந்திருக்கும் பௌர்ணமிநிலவு

உன் நினைவு
அசைபோட
என் நிழலும்
துணை சேர
பாதமும் பயணிக்குது
நாம் நடந்த பாதையில்

வெண்ணை திருடும்
கண்ணனாய்
மனதை
திருடி கொண்டாய்

விடியலை விட
பிரகாசமானது
காதலின் ஒரு பார்வை

உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்
என்றுமே
மீளக்கூடாதத் தருணம்