கேட்டுபெற விருப்பமில்லை
என் இதயம் புரிந்து நீ
வருவாய் என்ற நம்பிக்கையில்
காத்து கிடக்கிறது என் காதல்

நெருக்கம் காதலின் மொழி அல்ல
அது இரு ஆன்மாக்களின்
அமைதியான உரையாடல்

தொடுதலில் மறைந்திருக்கும் நெருப்பு
இரத்தத்தையே சுழற்றுகிறது

உனக்கானவை எதுவும்
உன்னை விட்டுவிலகாது
அப்படி விலகினால்
அது உனக்கானவை அல்ல

கண்கள் கூட
பேசாமல் இருந்தாலும்
அந்த மௌனத்தில்
ஆயிரம் வார்த்தைகள் உண்டு

காதல் எல்லோரையும் வாழ
வைத்தது என்னை மட்டும்
ஏன் அழவைக்கிறது

நடைபாதையில் நடந்த காதல்
கனவுகளில் மட்டும் நிறைந்தது

மனதை பேச வைக்கும்
அமைதி தான்
உண்மையான காதலின்
அடையாளம்

ஒரு முறையேனும்
என் திசை நோக்கு
என் பயணம்
இனிதே நிறைவடையும்

நீ என்னிடம் பேசவில்லை
என்றாலும் உன்
நினைவுகள் மட்டும்
என் மனதில் இருந்து
கொண்டே தான் இருக்கும்