கண்ணோட்டத்தில்
ஆரம்பமான காதல்
நெஞ்சோட்டத்தில்
வாசலமைக்கிறது
கண்ணோட்டத்தில்
ஆரம்பமான காதல்
நெஞ்சோட்டத்தில்
வாசலமைக்கிறது
யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்
உனை நினைவூட்டும்
அனைத்தும் எனக்கு
நம் காதல்
சின்னங்களே
துளிர்விடும்
தூரத்தை வென்ற நெருக்கமே
தீவிர காதலின் அடையாளம்
பேரலையில்
அகப்பட்டு
கொண்டாலும்
அமைதியாகவே
மூழ்கிடுவேன்
உன் நினைவினிலேயே
காதல் பேசும் வார்த்தைகளில்
உண்மை இருக்கும்
அதனால் தான்
அது காதலாகிறது
குயிலின்
குரலோசை கேட்டேன்
தொலைவிலிருந்து
தொலைபேசி மூலம்
ஒவ்வொரு நாளும்
உன்னை இழப்பது
என் இதயத்தை
கனமாக்குகிறது
கண்கள் கலக்கும் தருணம்
உலகம் இருவருக்குள் மட்டுமே இருக்கும்
உன் பார்வை
ஒரு கவிதை
என் இதயம்
அதை ரசிக்கின்ற கவி