என் காதலும் அனாதை
ஆனது நீ என்னை
விட்டுச்சென்ற பின்
மனதின் ஓரத்தில்
முளைக்கும் பாசம்
காலத்தின் சோதனையால்
மேலும் ஆழமடைந்து
உயிரின் ஒளியாகிறது
நெருக்கமாக இல்லை என்றாலும்
உன் நினைவுகள்
எனக்கு அருகில் இருக்கிறது
இரவின் அமைதியில்
நினைவுகள்
நெஞ்சை நனைக்கும்
காதல் தான் உண்மை
தொடும் தருணம்
உடலை மட்டும் அல்ல
ஆன்மாவையும் உருகச் செய்கிறது
கண்கள் சந்திக்கும்
அந்த நொடியில்
ஆயிரம் வார்த்தைகள்
சொல்லாமலே இதயம் பேசிவிடும்
மெல்லிசையிலும்
மெ(இ)ன்னிசை
உன் நினைவு
விலகலில் இல்லை
வாழ்க்கை
உன் விழிகளில்
என்றுணர்ந்தேன்
என்னவனே
மறுத்திட முடியாமலும்
தெரிவிக்க தெரியாமலும்
எனக்குள்ளே மையல்
கொண்டுள்ளது உனக்கான
என் தூரத்து நேசங்கள்
மௌனமும் ருசி பெறும்
காதல் விழிகளில் கரைந்தால்
💖 பக்கம் 121 / 478
📋 Copied