விரல்களின் இளமை
தோல் மீது பயணிக்கும்போது
உடல் கவிதையாக மாறுகிறது
விரல்களின் இளமை
தோல் மீது பயணிக்கும்போது
உடல் கவிதையாக மாறுகிறது
கொஞ்சம் வெளிச்சம்
கொஞ்சம் இரவு
கொஞ்சம் காற்று
கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம்
கொஞ்சும் விரல்களில்
நிறைய காதல்
நெஞ்சை தொடும்
ஒரு மென்மையான தொடுதல்
ஆயுளில் மறக்க முடியாததாய் போகும்
என் இதயத்தில் எப்போதும்
உன் பெயர் உள்ளது
அது எனக்கு அதிக
அன்பையும் பளிச்சிடும்
அரவணைப்பில் நான்
உலகத்தை மறந்தாலும்
உன் நேசத்தில் நான்
என்னை மறக்க மாட்டேன்
நீ பேசும்போது
என் மனது காதலாகிறது
நீ அசைந்தால்
என் உலகமே நடனமாடுகிறது
தேவையில்லை என்ற
பின் தேடல் எதற்கு
நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்
சிக்கிமுக்கி
கற்களாய் விழிகள்
மோதிக் கொண்டதில்
சிதைந்து
போனதென்னவோ மொழிகள்
கைகள் இணைந்திருந்தால்
மட்டுமா காதல்?
இதயம் இணைந்திருந்தால்
தான் காதல் தொலைவில்
இருந்தாலும் தொலையக்கூடாது