என் கண்களின்
ஜீவன் உன்னில்
மௌனத்தின் நடுவே
ஒரு காதலின் சப்தம் கேட்டது
அது நெஞ்சைத் துளைத்தது
காரிருள் சூழ்ந்தாலும்
நம் காதல் வானில்
ஜொலிப்போம்
பௌர்ணமியாய்
வானில்
நிலவில்லாத நாட்கள்
கூட உண்டு
என்னுள்
நின் நினைவில்லாத
நாட்கள் என்பதே இராது
நெருக்கம் கூட பரவசமாகும்
உணர்வுகள் தீண்டும் அந்த நொடியில்
உன் மௌனத்திற்கு
இத்தனை வலிமையா
அத்தனை உணர்வுகளையும்
தூக்கியெறிய
துணியிதே மனம்
விருப்பத்தின் அலை நரம்புகளை
கிளரச் செய்து
தொடாத தொடுதலின்
கனவுகளை கூட
உண்மையாய் உணரச் செய்கிறது
உன் காற்றின் வாசமே
என் வாழ்வின் உணர்ச்சி
அதில் காதல் புன்னகை
கொண்டாடுகிறது
உன் மீதுள்ள
அதீத காதல்
எனையும் எல்லைகள்
மீற சொல்லுதே
உனையும் இம்சித்து
இருவர் இடையிலான
நிமிடம் ஒன்று
காலத்தையே மறக்க வைக்கும்
💖 பக்கம் 11 / 478
📋 Copied