வாழ்வின் காயங்களை மறைக்கிறது
பாசத்தின் மென்மையான அரவணைப்பு
கண்கள் அழவில்லை
உதடுகள் பேசவில்லை
ஆனால் இதயம் மட்டும்
அதிகமா துடிக்கிறது
உன்னை கானாத போது
விரல் நகரும்
ஒவ்வொரு திசையும்
ஒரு காதல் கவிதைபோல
உணர்ந்தேன்
சுவாசமும் கனமாக
மாறும் போது
ஆசை நிமிஷங்கள்
நிலையாகின்றன
அத்தனை சேட்டைகளையும்
செய்துவிட்டு
அமைதியாய் உறங்கும்
குழந்தையாய்
பல நேரங்களில் நீயும்
ரசிக்கிறேன் உனை நானும்
ண்கள் நேராக
சந்திக்கும் போது
காதல் தன் ஆழத்தை
வெளிப்படுத்துகிறது
கை பிடித்த அந்த ஒரு நொடியில்
வாழ்நாள் முழுதும் பயணம் முடிவுற்றது
கைகளால் பிடிக்க முடியாத
உணர்வுகளும் இதயத்தில்தான்
இழைபின்னி கிடக்கின்றன
சற்றே
இமை மூடிக்கொள்ளேன்
யோசித்து வைத்ததை
வாசிக்க வழியின்று
யாசிக்கிறது மனம்
அருகில் நெருங்கும் போது
சுவாசமே கவிதை போல இசைக்கிறது
💖 பக்கம் 10 / 478
📋 Copied