தவிக்கும் இரு
நெஞ்சம் தடுமாறுகிறது
என் நெஞ்சம் என்
காலடி கெஞ்சும்
உன் வருகைக்காக
உன் நிழல் கூட
என் மனசுக்கு
கவசமாக இருக்கிறது
அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
பார்வை மோதும் தருணம்
இதயத்தின் துடிப்பை
எழுதிக் கொண்டது
உதடுகள் நெருங்கும் அருகாமை
இரவின் தாளத்தை
முற்றிலும் மாறச் செய்கிறது
எந்த விளக்கமும்
தேவைப்படாத உணர்வு
அதுவே அன்பு
நெருக்கம் மட்டும் அல்ல
இரு இதயங்களின் ஒற்றுமையே
உண்மையான காதல்
துடிப்பின் வேகம் கூட
காதலரின் அருகில்
மெதுவாகிவிடுகிறது
இடைவெளி வலியை
தருமென தெரிந்தும்
பிடிவாதமாய் அனுபவித்து
இருக்கிறோம் இருவரும்
ஒரு நொடி
பிரியவும்
தயங்குதே
இருதயம்
💖 பக்கம் 10 / 478
📋 Copied