மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை...
உன் வாசனை
என் சரீரத்தை பற்றிக்கொள்ளும் போது
உணர்வுகளின் நட்சத்திரங்கள்
இரவில் மட்டுமல்ல
என் கண்களில் ஒளிர்கின்றன
மனம் நினைத்தால்
எதுவும் சாத்தியமே
உனை மறப்பதை
தவிர
தடைகள் இல்லாத ஆசைதான்
காமத்தின் மெல்லிய இசை
இதயம் நேசிக்க
காரணம் தேடாது
உணர்ச்சி வந்தால் போதும்
எனக்கான நேரமே
உன்னிடம் இல்லாத போது
என் மீது காதல் மட்டும்
எப்படி இருக்கும்
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ
இரு கண்கள்
சந்தித்த இடத்தில்
இரு உயிர்களும்
ஒன்றாகிய பிறகு
எதுவும் பழையது இல்லை
காதல் வந்தபின்
மனம் தனக்கென
ஒரு அமைதியை கற்றுக்கொள்கிறது
தோளில் சாய்ந்த அந்த நிமிடம்
ஆயுள் முழுதும் நினைவாகிப் போனது
💖 பக்கம் 9 / 478
📋 Copied