நல் நிகழ்வுக்கு
ஆதரவு கொடுங்கள்
நல் சிந்தனைக்கு
வாழ்வு கொடுங்கள்
தன்னிலை
உணர்ந்த போதும்
பிறர் நிலை உணரும்
தர்மனாக இருங்கள்
வாழும் நாட்கள் சிறிதே
நல்மனிதனாக வாழும்
மகத்துவத்தை பெறுங்கள்

சில நேரம் மழை போல
வருவது சோகமல்ல
புதுப்பிக்கும் சக்தி

வாழ்க்கை என்ற சொல்
ஒரு பெரிய
புத்தகத்தின் தலைப்பு
அதன் முக்கியமான அர்த்தம்
சிறு சந்தோஷ
நிமிடங்களில் தான் உள்ளது

பணம் யாருடன் அதிகம்
சேர்கிறதோ அவர்களை
உலகத்துக்கு அதிகமாக
பிடிக்க வைத்து விடுகிறது

ஒரு சிங்கம் ஆடுகளின்
கருத்துகளைப் பற்றி
பொருட்படுத்துவதே இல்லை

பிடிவாதம் கொண்ட
எந்த பெண்ணின் கர்வமும்
உடைந்து போகும் தனக்கு
பிடித்த ஆணுக்காக

காலங்கள் கடந்து போகும்
காயங்கள் ஆறி விடும்
இப்படி சொல்லிக்
கொண்டு தனக்குத்
தானே ஆற்றிக் கொண்ட
காயங்கள் பல

ஒவ்வொருவரின்
இதயமும்
மண் பொம்மை போலவே
நாம் விரும்பியவர்கள்
விலகிச் சென்றதும்
அது உடைந்து
உபயோகமில்லாமல்
போய் விடுகிறது

உண்மை இல்லாத வாழ்க்கை
கண்ணீர் இல்லாத கண்ணாடி

பயணத்தின் அழகு
இலக்கை அடைந்ததில் இல்லை
நடந்து வந்த பாதையில்தான்