அலைபாய்கிறது மனம்
உன் நினைவுகளை மட்டும் தேடி
முகவரி தொலைத்த கடிதமாய்
நெருக்கம் எனக்கு ஒரு
வசீகர மயக்கம்
அதில் இருந்து
வெளியே வரவே விரும்பவில்லை
என் பலவீனமும்
உன் அமைதியா
பத்தி கொ(ல்)ள்கிறதே
காதல் தீ உன்னில்
ஆடிப்பெருக்காய்
ஊற்றெடுக்கும்
உன் நினைவில்
மனமும்
சற்று தள்ளாடி
தான் போகிறது
ஆசையின் நெருப்பு
மூச்சின் இடைவெளியிலேயே
பெருகி எரிகிறது
உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்
காதல் வாழ்க்கையை மாற்றாது
வாழ்க்கையை உணர வைக்கிறது
மௌனமாக பேசும் கண்கள்
காதலின் முதல் கவிதை
சினுங்கும் கொலுசுக்கு
அஞ்சியே
மெல்ல நடை போடுது
பாதமும்
உன் உறக்கத்தை
சீண்டிட
கூடாதென்றே
விரல்கள் தொடும்
அந்த நொடி
நேரமே நிற்கும்
💖 பக்கம் 1 / 478
📋 Copied