சரியோ தப்போ உன்
வாழ்க்கையை நீ வாழு
இங்க சரி தப்பு சொல்ல
யாரும் ஒழுங்கு இல்ல

தனிமை வரும்போது தான்
உண்மையான உறவுகளின்
மதிப்பை உணர முடியும்

சொந்தம் என்பது சுண்ணாம்பு
மாதிரி அளவாக இருக்க
வேண்டும் அளவுக்கு அதிகமான
வாய் வெந்துவிடும்
வாழ்க்கை நொந்துவிடும்

நல்ல விஷயத்திற்காக
தனியாக நிற்க வேண்டிய
சூழ்நிலை வந்தாலும்
தைரியமாக நில்

வாழ்க்கையில் ஏற்ப்படும்
சில வலிகள் தான்
வரிகளாகிறது

புரிதல் இல்லாத
வாழ்க்கையில் புதையலே
கிடைத்தாலும் பயனில்லை

வாழ்க்கை ஒரு கேள்வி
யாராலும் பதில் தர முடியாது
மரணம் ஒரு விடை யாராலும்
கேள்வி கேட்க முடியாது

விடாமுயற்சி
தோல்விகளை வெல்லும்
ஒற்றை மருந்து

என் விழிகளை
உற்றுப் பார் வழிவது
நீரல்ல உதிரம்
என்று உணருவாய்

பேச முடியாத வலிகள் தான்
மனதை அதிகம் மாற்றும்