கடந்துவந்த பாதையே
காலம் நமக்கு
கற்பிக்கும் பாடம்

நமக்காக வாழ்கின்றவர்கள்
நம்மிடம் எதிர்பார்ப்பது
நம் சந்தோஷத்தை மட்டுமே

வாழ்க்கை என்பது
ஒரு பாடல் அல்ல
ஒவ்வொரு வரியும்
நாம் எழுத வேண்டிய கவிதை

விழுந்துவிட்டோம் என்று
நினைப்பது
வாழ்க்கையின் முடிவல்ல
மீண்டும் எழுந்து விடுவோம்
என்ற "இருங்க பாய்" மொமெண்ட்
வாழ்க்கையில் இருந்தால் தான்
நம்மை வெற்றிக்கு
அழைத்து செல்லும்

பிடித்தவர்களிடம் பேசுவதற்கு
கூட பயமாக இருக்கு
தொல்லையாக நினைத்து
விடுவார்களோ என்று

பொறாமை ஒரு நஞ்சு
அதை அடக்காவிட்டால்
உன் வாழ்க்கையே அழிகிறது

இரண்டு வாய்ப்புகள்
மாற்ற முடியாதவற்றை
ஏற்றுக் கொள்வது
ஏற்றுக் கொள்ள
முடியாதவற்றை
மாற்றி காட்டுவது

தூங்கும் திறமைக்கு பதில்
விழிக்கும் முயற்சி வேண்டும்

அனுபவிக்க தவறிய
ஒவ்வொரு நாளும்
மீண்டும் பிறக்காத வரம்

நாளை பற்றி கவலைப்படாமல்
இன்றை நிம்மதியாக வாழ்வதே
புத்திசாலித்தனம்