பிடித்தவை சலிப்பாகிறது
சலிப்பு பெரும்
வெறுப்பாகிறது
வெறுப்பு கோபம்
அடைய செய்கிறது
கோபம் பிறரை
கண்டபடி சாடுகிறது

வலி தந்தவர்களையும்
வாழ்த்தவே செய்கிறது
உண்மையாய் நேசித்த நெஞ்சம்

சில மனிதர்கள் இழக்க முடியாத
நிழல்கள் போல மாறிவிடுவார்கள்
நாம் தேடினாலும் திரும்பி வரமாட்டார்கள்

அதிகம் அன்போடு
நடந்து கொள்ளாதே
அடிமையாக்கி விடுவார்கள்

மாற்றம் என்கிற
வார்த்தையை தவிர
அனைத்தும்
மாறிக் கொண்டு தான்
இருக்கிறது மனிதனின்
மனம் உட்பட

வெற்றி எல்லோருக்கும்
கிடைப்பதில்லை
ஆனால் வெற்றி
கிடைக்கக்கூடிய தகுதி
எல்லோருக்கும் உண்டு

சொந்தம் என்பது சுண்ணாம்பு
மாதிரி அளவாக இருக்க
வேண்டும் அளவுக்கு அதிகமான
வாய் வெந்துவிடும்
வாழ்க்கை நொந்துவிடும்

அன்று வயதைப் பார்த்து
வந்த மரியாதை
இன்று வசதியை பார்த்து
மட்டுமே வருகிறது

திணிக்கப்படும் எதுவும்
ரசிக்கபடாது வேறு வழியின்றி
மனம் ஏற்றுகொள்ளுமே தவிர

சந்தர்ப்பமும்
சூழ்நிலைகள்
மட்டுமே
மனிதனின் குணத்தை
எடுத்துக்காட்டும் கண்ணாடி