மனது மரத்துப் போவதற்கு
நோய் மட்டும்
தேவை இல்லை
ஏமாற்றங்களும்
சில துரோகங்களும் போதும்

சூரியன் தோன்றும் வரை
இரவு வீழ்ந்ததே இல்லை
உன் நாளும் வரும்

நமக்கு கிடைக்கும்
வாய்ப்புகளை எண்ணிக்கோள்
இல்லாத வாய்ப்புகளை
எண்ணி வருத்தப்படாதே

என் நாள் எவ்வளவு
கஷ்டமாக இருந்தாலும்
ஒரு நிமிடம் உன்னிடம்
பேசினால் எல்லாம்
கஷ்டமும் பறந்து போகும்

தினம்
ஒரு பாடத்தை
கற்றுத் தருகிறது
நம் வாழ்க்கை
என்னும் பாடசாலை
அதை புரிந்தவர்கள்
பிழைத்துக் கொள்கிறார்கள்
புரியாதவர்கள்
புதைந்தே விடுகிறார்கள்

நீ முன்னேறினால்
உன்னை விமர்சிக்கும் அனைவரும்
உன் வெற்றியை ஏற்கத் தயங்குவார்கள்

வலி இன்றி சிரிக்கும்
சிரிப்புக்கும்
விழியின்றி
சிரிக்கும் சிரிப்புக்கும்
ஆயிரம் அர்த்தம் உண்டு

காயங்கள் ஆறிய போதும்
நினைவுக்கு வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது

உன்னை செதுக்கி
கொண்டே இரு
சிலையாகவில்லையானாலும் சரி
கல்லாய் இருக்காதே

விரும்பியதைப்
பெற காசிருந்தால்
மட்டும் போதாது
பொறுமையும் வேண்டும்