வாழ்க்கை ஒரு புயல் போல்
அமைதி தேடுவோரே
அதைக் கடக்கிறார்கள்
நீ யார் என்பதை
உன் செயல் தான்
சொல்லனுமே தவிர
அடுத்தவன்
சொல்லக்கூடாது
இன்று செய்யத் தயங்குவதை
நாளை செய்ய நேரம் இருக்காது
உங்கள் இலக்கை அடைய
கவனத்தை மையமாக்குங்கள்
தேவையற்ற விஷயங்கள்
உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும்
நேரமின்மை என்பது
நாகரீகமான புறகணிப்பு
எல்லாவற்றையும்
இழந்த பின்னர்
உண்டாகும் புன்னகை
எப்பவுமே நிரந்தரமானது
இனி யாரையும் ஏற்கக்கூடாது
என்ற மனநிலை
அனுபவம் கொடுத்தது
பொறாமை கொண்ட இதயம்
எப்போதும் வெற்றியிலிருந்து
தள்ளிச் செல்லும்
அசைவில்லாத கல்லையே
பாசி மூடும்
முயற்சி இல்லாத மனமோ
அழிந்துவிடும்
எதையும் பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே
ஒவ்வொரு கடின நிலையும்
உன்னையே தேடி வருகிறது
அதில் நீ வெல்ல வேண்டும் என்பதற்காக
📖 பக்கம் 65 / 606
📋 Copied