மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத்து நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை
மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத்து நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை
ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்
தோல்வியை
ஏற்றுக்கொள்ளாதவன் தான்
வெற்றிக்கு அருகில் இருக்கிறான்
அதிகம் பேசிக்கொள்ளாத
இரு உறவுகளுக்குள் தான்
அதீத நட்பு இருக்கும்
தனிமையான
அமைதி தான்
நீ யார்
என்று உனக்கு
அறிமுகம் செய்யும்
மற்றவர்களின் மனதைக்கவர
ஆடம்பரம் தேவையில்லை
கண்ணியமான உடையும்
மலர்ந்த புன்னகையுமே
போதுமானது
துணிவில்லா மனது
அழுகிறதில்லை
அது கதறி
அமைதியாகிவிடுகிறது
நம்பிக்கையின்
நிழலில் நின்றால்
பயம் அருகில் கூட வராது
வெற்றியின் பரம ரகசியம்
எங்கே ஒளிந்திருக்கிறது
தெரியுமா நீ செய்வதை
விரும்பி செய்வதில்
தான் இருக்கிறது
உன்னை செதுக்கி
கொண்டே இரு
சிலையாகவில்லையானாலும் சரி
கல்லாய் இருக்காதே