தான் படும் கஸ்டங்களை
வெளியே சொல்லாத
ஒரே ஜீவன் அப்பா

சின்ன சின்ன மகிழ்ச்சிகளே
வாழ்க்கையை பெரிதாக மாற்றுகின்றன

நேரங்கள் கடந்து போகும்
ஆனால் அந்த நேரத்தில்
நீ என்ன செய்தாய்
என்பதே அர்த்தம்

யாரிடமும் பேச
வேண்டாம் என்ற
மனநிலை உருவாகக்
காரணம் அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்

ஒருவரின் பேச்சால்
அவர் உள்ளத்தை
அறிந்திட முடியாது
இனிக்க இனிக்க பேசுபவர்
நலன்விருப்பியுமல்ல
கடிந்துக்கொள்பவர் கேடு
நினைப்பவருமல்ல

மனதில் அமைதி இருந்தால்
வெளியே இருப்பது
எல்லாம் ஓசைதான்

போராடி தோற்றுப் பார்
ஜெயித்தவனும் உன்னை
மறக்க மாட்டான்

சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

வாழ்க்கையில்
அதிகம்
ஆசை படாதீர்கள்
ஆசை வளர்க்காதீர்
இறுதியில் என்னவோ
ஏமாற்றமே

நம் அன்புக்குரியவர்களின்
சிறு மாற்றம் கூட
நம்மை அழ வைக்கும்