இவ்வுலகில்
நம்மை அடுத்தவர்கள்
உடன் ஒப்பிட
வேண்டாம்
நாம் விலை
மதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வைத்தால்
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்

வாழ்க்கையில்
வெற்றியை அடைய
முன்னேற்றம் முக்கியம்
அல்லாமல் விரைவாக ஓடுவதில்லை

ஆர்வமும் அரவணைப்பும்
இருந்து விட்டால்
உலகமே நம் கையில்

கோபத்தின் நேரத்தில்
அமைதியை காப்பாற்றுவது
அறிவின் அடையாளம்

எல்லாரிடமும்
அன்பா இருக்கலாம்
ஆனால் யாரோட அன்புக்கும்
அடிமையாக இருக்கக் கூடாது

வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரிகள் நீ
நேசித்த இதயத்தில்
சுவாசிக்க வைத்த இதயம் நீ

அனுபவசாலிகள்
வயதை கடந்த
வருபவர்கள் அல்ல
வலிகளை கடந்து
வருபவர்கள்

அனுபவங்கள் தான்
ஆசைகளை விட
பெரிய ஆசான்

வாழ்க்கை ஒரு
கண்ணாடி போல
எப்படி பார்த்தாலும்
அதே பிரதிபலிப்பு

எதிரியை ஜெயிக்கணும்னு
முடிவு செய்துவிட்டால்
நீ ஏந்த வேண்டிய
ஒற்றை ஆயுதம்
புன்னகை மட்டுமே
எவ்வளவு
தொல்லைகள் கொடுத்தாலும்
எப்போதும் சந்தோஷமாய்
இருக்கிறானே என்கிற
நினைவே அவனை
கொன்றுவிடும்
(மகிழ்ந்திரு)