அடுத்தவர்களை கெட்டவர்களாக
சித்தரிக்க நீ அணிந்துக்கொண்ட
நல்லவன் முகமூடி
அதிக நாட்கள் நீடிக்காது
உண்மை
ஓர்நாள் வெளிப்படும்
எல்லா எதிர்பார்ப்புகளிலும்
ஏமாற்றம் என்ற பரிசும்
எல்லா ஏமாற்றத்திற்கு
பிறகும் பக்குவம்
என்ற பரிசும்
கிடைப்பதற்கு
பெயர் தான் வாழ்க்கை
வாழ்வில் தோல்வியையே
சந்திக்காதவன் எதையுமே
முயற்சிக்காதவனே ஆவான்
பார்க்கின்ற அனைத்தையும்
மனதிற்கு கொண்டு
செல்லவும் கூடாது
மனதில் நினைப்பது
அனைத்தையும்
பேசிவிடவும் கூடாது
இரண்டும் பிரச்சனைதான்
நெஞ்சில் பொறாமை இருந்தால்
மனதில் அமைதி இருக்காது
வாழ்வின் முன்னேற்றங்களுக்கு
நினைவாற்றல் எவ்வளவு
அவசியமோ அதே போல்
வாழ்வின் மகிழ்ச்சிக்கு
ஞாபகமறதி அவசியம்
கண்ணீரின் சுவை
கசப்பாக இருந்தாலும்
அது மனதின் பாரத்தை குறைக்கும்
வாழ்க்கையும் ஓடுகிறது
நாமும் ஓடுறோம்
கூடவே
கஷ்டமும் கவலையும்
சேர்ந்து ஓடி வருது
ஈரம் பட்ட மண்ணில்
விழும் கால் தடங்களை
விட காயம்பட்ட மனதில்
எழும் வடுக்கள்
வார்த்தையில் அடங்காது
சோகமான தருணங்களில் தான்
உண்மை உறவுகள் தெரிகின்றன
📖 பக்கம் 5 / 606
📋 Copied