யாரை தேடி அலைகின்றது
என்று தெரியவில்லை
இந்த நிலா இரவு
முழுவதும் அலைந்து
கொண்டே இருக்கின்றது

சிறிய குறைவுகளையும்
சமாளிக்க முடியாதவனுக்கு
பெரிய வெற்றிகளை
அடைய முடியாது

எல்லா தேடல்களிலும்
ஏதோ ஒன்று
கிடைத்து கொண்டு
தான் இருக்கிறது ஆனால்
நாம் தேடிய
ஒன்றை தவிர

என்னவிலை கொடுத்தாலும்
நாம் நினைக்கும்படி கிடைக்காது
(அனுபவங்கள்)

இரவின் அழகை ரசிக்க
ஒளியின் அருமையை
உணர வேண்டும்

உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை

நம்பிக்கை என்னும் ரதத்தில்
பயணித்து கொண்டு
இருப்பவர்களுக்கு
வெற்றியின் இலக்கு
தூரம் இல்லை

பயமில்லாமல் நடந்தவர்கள் தான்
வெற்றியின் பாதையில்
நீண்ட பயணம் செய்கிறார்கள்

வசதியாயிருக்கும்போதே
எளிமையாக
வாழ கற்றுக்கொண்டால்
ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டாலும்
மனம் ஏங்காது
வாழ்ந்தவாழ்க்கையை நினைத்து

உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது