எண்ணம் உறுதியாக இருந்தால்
எண்ணியபடி உயரலாம்
நமது எண்ணம் தான் நம்முடைய
எதிர்காலத்தை உருவாக்கிறது
(எண்ணம் போல வாழ்வு)

வாழ்க்கையை சுமையாக
எண்ணினால் சோர்வு தரும்
பாடமாக எடுத்துக்கொண்டால்
வெற்றி தரும்

தவறாகி விடுமோ
என்ற எண்ணம் தான்
பல வாய்ப்புகளை
தவற விட வைக்கிறது

ஒருவரை
நேசிப்பதற்கு முன்பு
அவர்களின் விருப்பங்களையும்
நேசிக்க கற்றுக்கொ‌ள்ளு‌ங்க‌ள்
அதில் தான்
அன்பு நிறைந்திருக்கும்

துன்பங்களே
இல்லாத வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல

உரிமை இல்லாத இடத்தில்
ஓராமாக நிற்பதை விட
வெளியேறி விடுவது மேல்

பொறாமை என்பது
தன்னை நீக்கிக்கொண்டு
பிறரை வாழ வைத்தல்

சுயநலமான நண்பனுடன்
நட்பாய் இருப்பதை விட
நண்பனே இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்

பேசாத உழைப்புதான்
பேசும் வெற்றியை உருவாக்கும்

இங்கே எதுவுமே
நிரந்தரமில்லை
நினைவுகள்
ஒன்றைத் தவிர