தேவைக்காக பேசுவோரையும்
பிடிக்காது தேவைக்காக
பேசவும் தெரியாது
தேவைக்காக பேசுவோரையும்
பிடிக்காது தேவைக்காக
பேசவும் தெரியாது
அன்பைக்கொண்டு
அன்பைப் பெறுங்கள்
மாறாக
பொறாமையில்
ஒருவர் மீது ஒருவர்
கொண்டுள்ள
அன்பைக் கொன்று
அவ்விடத்தில் தங்கள் அன்பை
நிலைநிறுத்த எண்ணுவது
குற்றமே
சில வலிகள் பேச முடியாது
ஆனால் உள் மனதை
முற்றிலும் மங்கவைக்கும்
அடுத்த படி
எப்போது எடுக்கப் போகிறாய்
என்பதே உன் வாழ்க்கையை
முடிவு செய்யும்
மற்றவர்களை
வெல்ல ஆசைப்படாதே
நாளைய நீயை வெல்ல முயல்
பட்டுப்போன மரத்திலும்
ஓர் இலை உயிர்த்திருக்கும்
மீண்டும் மரம்
துளிர்விடும் என்ற
கடைசி நம்பிக்கையின்
வாசத்தில்
மரத்தின் வாழ்க்கையும்
மனிதனின் வாழ்க்கையும்
ஓர் வகையில் ஒன்று தான்
ஆரம்பிக்க
உந்துதல் வேண்டாம்
நம்பிக்கை போதும்
உயிர்
எழுத்தாய்
இருந்தேன்
மெய்
எழுத்தாய்
வந்தாய்
உயிர்மெய்
எழுத்தானோம்
இதயத்தை கவர்ந்து
விட்டால் எது சொல்லியும்
புரிய வைக்கலாம்
ஒவ்வொரு விடியலும்
உணர்த்துவது ஒன்றை தான்
இன்னொரு வாய்ப்பு இருக்கிறது
பயன்படுத்திக் கொள் என்று