அனைத்திலும்
விளையாட்டுதனமாய் இருந்தால்
வாழ்க்கை நம்மை
வைத்து விளையாடிவிடும்

கனவை நம்பும் மனமே
வெற்றியின் முதல் விதை

கடந்து வந்த பாதை
கண்ணீரால் நனைந்தாலும்
எதிர் வரும் பாதை
சிரிப்புடன் தோன்றட்டும்

உன் அருகாமையில்
நான் என் அகிலமாய் நீ

சிரித்த நாட்களை
நினைத்து அழுகிறேன்
அழுத நாட்களை
நினைத்து சிரிக்கிறேன்

எனது வெற்றிக்கு காரணம்
நான் எப்போதும் எனது
தோல்விகளுக்கு என்னைத்
தவிர வேறு எந்த
காரணத்தையும் கூறுவதில்லை

முயற்சி உடையவனுக்கு
எட்டு திசையும்
ஏற்ற திசை தான்

மழை ஓய்ந்த பின்பு
வானம் வெளிச்சமாய் தெரியும்
சிரமங்களை கடந்த பின்பு
வாழ்க்கையும் புதியதாய் தென்படும்

வலி இருக்கிறது என்பதே
நாம் உயிரோடு இருக்கிறோம்
என்பதற்கான அடையாளம்

தோல்வியிலும்
தொடர் முயற்சியை
மேற்கொள்பவர்களுக்கே
வெற்றி சாத்தியம்