காலம் ஓடும் வழியை
மாற்ற முடியாது
ஆனால் அதை
எதிர்கொள்ளும் நிலைமை
நம்மால் மாறும்

போராடுபவனுக்குத்தான்
வாழ்க்கையில் வெற்றி கிட்டும்

சில பயணங்கள்
தனிமையில் தொடரவேண்டும்
வாழ்க்கையின் அர்த்தம் புரிய

செயல்களில் இருக்கும்போது
வார்த்தைகளுக்கு இடமில்லை

ஒரு போலி வாக்குறுதியை விட
தெளிவான நிராகரிப்பு
எப்போதும் சிறந்தது

நீண்ட தூரம்
ஓடிவந்தால் தான்
அதிக தூரம்
தாண்ட முடியும்

வாழ்க்கை உனக்கு வசமாவதும்
அதுவே உனக்கு விஷமாவதும்
உன் கையில் தான் இருக்கிறது

விக்கல்
வரும்போதெல்லாம் யாரோ
உன்ன நினைக்குறாங்க
என்றவுடன்
யாரோ ஒருவரை
நம் மனதும்
நினைக்கத்தான் செய்கிறது
(நினைவுகள்)

தனிமை என்பது வலி
என்று யார் சொன்னது
தனிமை என்பது வழி
நம்மை பற்றி நமக்கே
புரிய வைக்கும் நிலை

கவிதையும் ஒரு போதை
எதையாவது
கிறுக்கத்தான் சொல்லுது