நம் கண்களில் விழும் கண்ணீர்
நாம் காட்டும் சிரிப்பை விட
உண்மையானது

நமக்காக கவலைப்படும்
நண்பர்கள் இருக்கும் வரை
தினந்தோறும்
நண்பர்கள் தினம் தான்

பொய் காரணம்
சொல்லிக் கூட
ஒருவரை
வெறுத்து விடுங்கள்
ஆனால்
பொய்யான அன்பு காட்டி
யாரையும் ஏமாற்றாதீர்கள்

மதத்தை வளர்க்காமல்
மரத்தை வளர்
மதி உள்ள மனிதா

உரிமை இல்லாத
இடத்தில் எதையுமே
எதிர்பார்ப்பது
தவறு

முன்னேற்றம் என்பது
வேகத்தில் அல்ல
நிலைத்திருப்பதில் தான்

இப்பிரபஞ்சத்தின்
ஒற்றை நம்பிக்கையும்
ஒற்றைப் பேராசையும்
அன்பு மட்டும் தான்

கைக்கு எட்டும் தொலைவில்
இருக்கும் வெற்றிகூட எட்டிப்
போய்விடும் உன் தன்னம்பிக்கைக்கு
நீ சமாதி எழுப்பியிருந்தால்

மனிதர்களின்
உயரம் என்பது
அவரவர் மனதை பொறுத்தது

இல்லாததை மட்டும்
அழகு என்று நினைத்து
கொண்டிருந்தால்
இருப்பது எதுவும்
அழகாய் தெரிவதில்லை