மௌனத்தில் மூச்சும் கூட
சலனமாக இருக்கிறது

நம் வாழ்க்கையில்
நாம் தொலைத்தவர்களை
தேடலாம் ஆனால்
நமக்கு தொல்லை
கொடுத்தவர்களை
தேடவே கூடாது

பயப்படாதவர்கள்
தோற்கடிக்கப்பட முடியாது

மனிதனாக பிறந்தவன்
பயனின்றி அழியக்கூடாது

வாழ்க்கை பழைய பக்கங்களை
மூடச் சொல்லும்
ஆனால் நாம் புதிய அத்தியாயம்
தொடங்க மறுக்கிறோம்

மழை மட்டும் தான் இல்லை
சில நினைவுகளும் தூறல் விடும்

தவறுகள் வாழ்க்கையின்
ஒரு பகுதிதான்
ஆனால் அதில் இருந்து
திருத்திக்கொள்ளாததே பெரிய தவறு

காலத்திற்கு தகுந்த மாதிரி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலம் போய்
ஆளுங்களுக்கு தகுந்த மாறி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலக்கொடும வந்துருச்சு

எவ்வளவு தான் பாசம்
வைத்தாலும் குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு நாம்
மூன்றாவது மனிதர்கள் தான்

வேண்டியதைப் பெற
வேண்டாத்தை விடு