எளிமை தான் வாழ்க்கையை
அழகாக்கும் அலங்காரம்

கனவு காண்பது எளிது
அதை சாதிப்பது
நம்பிக்கையுடன் மட்டுமே

மதிப்பும்
மரியாதையையும்
பிறர் கொடுக்கும் போது
தற்பெருமையையும்
அகங்காரத்தையும்
அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
இல்லையென்றால்
எல்லாமே பூஜ்யமாகிவிடும்

கோபமும் ஒரு வகை
அன்பு தான்
அதை அனைவரிடமும்
காட்ட முடியாது
நெருங்கியவரிடம் மட்டுமே
காட்ட முடியும்

சிரிப்பு இல்லாத நாள்
சுவையற்ற உணவு போல
வெறுமையாகிறது

உங்களிடம் காதல்
அதிகமாக இருந்தால்
நிச்சயமாக வலியும்
அதிகமாகவே இருக்கும்

நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே

உன்னை விரும்பிய
ஒன்றை விட்டு
நீ விலகும் போது
நீ விரும்பிய ஓன்று
உன்னை விட்டு
விலகத் தொடங்கும்

வாழ்க்கையின்
இன்னொரு பகுதியை
காட்டியது தனிமை
அப்போ சிந்தித்து பார்க்கும்
போது தான் புரிந்தது
என் வாழ்க்கையின் நிலைபாடு

நல்லதே நடக்கும்
நல்லது மட்டுமே நடக்கட்டும்
நம்பிக்கையுடனும்
நல் எண்ணத்துடனும்