என் பெரும் வலி
நீ என்னை
தேடவில்லை என்பதே

என்னைப் பயன்படுத்த என்
வாழ்வில் நீ வந்தாய் என்றால்
நான் உன்னை என் வாழ்க்கையிலிருந்து
குப்பை போல தூக்கி எறிவேன்

பழகியதற்கான
பலனை அடைந்தவுடன்
சிலர் விலகுவதற்கான
காரணங்களை
தேடுகின்றனர்

நாம்
எந்த இடத்தில் இருக்கிறோம்
நமக்கான பொறுப்புகள்
என்ன என்று
உணர்ந்தாலே போதும்
வாழ்க்கையில் தெளிவும்
நற்பெயரும்
விரைவில் கிடைக்கும்

சில துன்பங்கள்
காற்றைப் போல
உருக்கொள்ள முடியாது
ஆனால் தாக்கும்

வலிகளின்
பரிணாமம்
விரக்தி

இருந்தால் உறவு
பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான்
வாழ்க்கை

பிறரை பாராட்ட
ஆர்வம் இருக்கும் வரை
நீ பாராட்டக் கூடிய
இடத்திற்கு சென்று
கொண்டே இருப்பாய்

என்னை மட்டும் அல்ல
என் கனவுகளையும்
சுமந்து கொண்டு
நடக்கிறார் என் அப்பா

தடைகளைத் தட்டிக்கழிப்பதை
விடத் தகர்த்து விடுவது
தான் புத்திசாலித்தனம்