கோபம் அடைமழையாக
கொட்டித் தீர்த்தாலும்
அன்பு அது ஒரு ஓரம்
நின்று குடை பிடிக்கும்

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்

பயந்து நின்றவர்கள்
வரலாறு
படைக்க மாட்டார்கள்

சிலரிடம்
சில விஷயங்களை
புரிய வைக்க
கஷ்டபடுவதை விட
சிரித்துவிட்டு
கடந்து செல்வது
நல்லது

நம் வாழ்க்கையில் வரும்
ஒவ்வொரு தடைகளுக்கு
பின்பும் இறைவன்
நமக்கு ஏதோவொரு
பாடத்தை கற்பிக்கிறான்

ஒருமுறை நான் உன்னை நம்பினேன்
ஆனால் நீ அந்த நம்பிக்கையை
உடைத்தாய் இப்போது நான் உன்னை
விட்டு விலகி இருக்க விரும்புகிறேன்

நாளையதை எதிர்நோக்கும்
மனம் தான்
இன்றைய வாழ்வின் சக்தி

கனவுகளின் விலை
உழைப்பின் வடிவத்தில் தான்
செலுத்த வேண்டும்

மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு
அமைகிறது

வாழ்க்கை என்பது
கசப்பை விடுவது அல்ல
கசப்பையும் ரசிப்பது