முடியாது என்று நினைக்காதே
ஏனென்றால் நீ இன்னும்
முயற்சி செய்யவில்லை

ஏக்கம் என்பது
ஒரு மௌன குரல்
எவரும் கேட்க முடியாதது

பொறாமையில்
யாரையும் வீழ்த்த
நினைத்தால்
நீதான் நிம்மதியிழந்து
தவிப்பாய்

பட்டு தெளிவதை
விட சிறந்த
பாடம் எதுவுமில்லை

உற்றுப் பார்த்தால்
ஒன்றுமே இல்லை
ஆனாலும்
ஏனோ விட்டு விலக
மனம் வருவதே இல்லை
இயற்கையின் அழகை
சொன்னேனாக்கும்

நான் தேடி
போகும் முன்
என்னை தேடி
வரும் அன்பு
ஒன்றே போதும்
வாழ்ந்து விடுவேன்
வாழ்க்கையை(யே)

அதிக உரிமையுடன்
பழகாதீர்கள்
அவர்கள் செய்யும்
சில செயல்
உங்கள் மனதை
காயப்படுத்தும்
என்பதைக் கூட
உணரமாட்டார்கள்

சில நேரங்களில்
யாரிடமும் எதுவும்
சொல்லாமல் தனிமையில்
இருப்பதே மேல்

கோபத்தில்
ஏழையாக இரு
அன்பில்
பணக்ககாரனாக இரு
வாழ்க்கை சிறக்கும்

நீங்கள்
நீங்களாக இருங்கள்
உங்களுக்கு
எது மகிழ்ச்சி
அளிக்கிறதோ
அதை செய்யுங்கள்