மனிதன் தன்னுடைய
தோல்விகளுக்கு வைத்த
மறுபெயர்தான் விதி

நாம் காத்திருப்பது
தெரிந்தும்
அடுத்தவர்களுக்கு
முக்கியத்துவம்
கொடுப்பதெல்லாம்
அவர்களுக்கே
உள்ள அலட்சிய குணம்

நிழலை அனுபவிக்க
தெரிந்தால்தான்
சூரியனின் மதிப்பை
உணர முடியும்

மறைந்த சூரியன்
மீண்டும் உதிக்கிறது
உன் வாழ்க்கையும் அதே போலவே

சரினு பட்டா
விட்டுக்கொடு
தப்புனு பட்டா
தள்ளி நில்லு

எண்ணங்கள் பிழையானால்
சிறகு அடிக்கும்
பட்டாம் பூச்சியும்
சிலந்தி வலைக்குள்
சிக்கிக்கொள்ளும்

அழுகின்ற வினாடியும்
சிரிக்கின்ற நிமிடங்களும்
வாழ்க்கை சக்கரத்தில்
நிரந்தரமில்லை

பக்குவம் என்பது யாதெனில்
புரிந்து கொள்வதோ
புரிய வைப்பதோ இல்லை
வாயை மூடிக்கொண்டு
தன்னுடைய வேலையை பார்ப்பதே

பொறுமையுடன் பயணம் செய்தால்
வெற்றி கதவையே திறந்து காத்திருக்கும்

வெற்றிக்கு பாதை இல்லை
தொடரும் பாதைதான் வெற்றியாகும்