நீரின்றி மீன் போல
நம்பிக்கையின்றி வாழ்க்கை
வெறும் போர்வை

வாழ்க்கை என்பது
ஒரு கண்ணாடி
நம்மை நம்பினால்
அது ஒளிரும்

வெற்றியின் கனியை
பறித்தவர்களே விடாமுயற்சியின்
பயனை முழுவதும்
உணர்ந்தவர்கள் எனலாம்

அன்பும் பாசமும்
விலை பொருள் அல்ல
மனதிற்கு பிடித்தவர்கள் மேல்
வரும் அழகான உணர்வு
உணர்வுகளை மதிப்போம்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுப்போம்

தெரிந்ததை பகிர்ந்து கொள்
தெரியாததை அறிந்து கொள்

தோல்வியை சந்திக்க
துணிந்து போனா
வெற்றியும் உன்னை
காண வந்துவிடும்

பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு

மதத்தை வளர்க்காமல்
மரத்தை வளர்
மதி உள்ள மனிதா

முயற்சி இருந்தால்
செல்லும் பாதை
எல்லாம் நாம்
வெல்லும் பாதை தான்

கடந்து வந்த பாதைகள்
காயங்களைத் தான் நினைவூட்டும்
ஆனால் நடக்கும் பயணம்
நம்பிக்கையைத் தரும்