வாழ்க்கை ஒரு பாடல் போல
ஒவ்வொரு நேரமும் இசை மாறும்
காலங்கள் அழிந்தாலும்
எக்காலத்தும் அழியாதது
நட்பு மட்டுமே
தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்
வெற்றி என்பது உன்னை
உலகிற்கு அறிமுகம் செய்வது
தோல்வி என்பது உன்னை
உனக்கே அறிமுகம் செய்வது
வலியை புரிந்த மனம் தான்
கருணை கற்றுக்கொள்கிறது
இங்கு எல்லோரும்
வேஷக்காரர்கள் தான்
ஆனால்
நாம் என்ன வேஷம்
போடுகிறோம் என்பதில்
தான் எல்லாம் அடங்கும்
சந்தோஷம் என்பது
அமைவதில்லை
நாம் தான் அமைத்து
கொள்ள வேண்டும்
சிறிய விஷயங்களில்
சந்தோஷம் காண்பவர்கள்
வாழ்க்கையை
அழகாக வாழ்கிறார்கள்
கண்ணீரை மறைத்தாலும்
மனசு மட்டும்
அதைக் காப்பாற்றி வைக்கும்
வாழ்க்கை என்பது
கடவுளின் ஒரு கேள்வி
பதிலை நாமே எழுதுகிறோம்
📖 பக்கம் 173 / 606
📋 Copied